காத்தான்குடி மத்திய கல்லூரியின் புதிய அதிபராக அல்ஹாஜ் எம்.சி.எம்.ஏ.சத்தார் தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் எம்.ஜாபீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எஸ்.உமர் மௌலானா, பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.எம்.ஹக்கீம், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் புதிய அதிபர் எம்.சி.எம்.சத்தார், முன்னாள் அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் பளுலுல் ஹக், செயலாளர் றிபாய் கலீல் உட்பட பாடசாலையின் பிரதி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கடந்த ஆறு வருடங்களாக காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய எஸ்.எஸ்.பிர்தௌஸின் சேவையை பாராட்டி பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பாடசாலை முகாமைத்துவக் குழு என்பவற்றினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தனர்
பாடசாலையின் வளர்ச்சியில் தொடர்ந்து பணியாற்ற அதிபர் எஸ்.எச்.பிர்தௌஸ் முன்வந்தமை அனைவரது பாராட்டுதல்களையும் பெற்று மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதன் போது காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எம்.சி.எம்.ஏ.சத்தார் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு